ஐதராபாத்: தெலங்கானாவில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். பாரதிய ராஷ்ட்ரி சமிதி கட்சியின் எம்எல்ஏ குதெம் மகிபால் ரெட்டி மற்றும் அவரது சகோதரர் குதெம் மதுசூதனன் ரெட்டி ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மசூசுதனன் ரெட்டிக்கு சொந்தமான குவாரி உட்பட சுமார் 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மதுசூதனன் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.