தகவலறிந்து வந்த போலீசார் தொலைக்காட்சி நிலையத்துக்குள் அதிரடியாக ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்த அனைவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் பத்திரமாக மீட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன் குயாகுவிலில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து தாதா கும்பல் தலைவன் அடோல்போ ஃபிட்டோ மசியாஸ் என்பவன் தப்பினான். அவனுடன் தப்பிய கும்பல்தான் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஈக்வடார் நாட்டில் அடுத்த 60 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். மேலும், ஆயுதம் தாங்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.