தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில்,மோடி அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் மோடி அரசின் தோல்வியால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. தேசிய புள்ளியியல் தரவுகளின்படி, உற்பத்தித் துறையின் உற்பத்தி வளர்ச்சி ஒரு வருடத்திற்கு முன்பு 4.5 சதவீதத்திலிருந்து கடந்த ஜனவரியில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொழில்துறையில் மந்தநிலை, வேலை இழப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து, விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க்கையை மோசமாக்குகிறது என்றார்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.