மேலும், பாழடைந்த நிழற்குடையில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உலா வருவதால் பயணிகள் அங்கு செல்ல அச்சப்பட்டனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயணியர் நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக ஒரு நிழற்குடை கட்டித் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தனர். ஆனால், புதிய நிழற்குடை கட்டுவதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மேலும், நிழற்குடை இல்லாததால் அப்பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் அங்கு சாலையோரம் உள்ள மரத்தடியிலும், சாலையிலும் பேருந்துக்காக ஆபத்தான முறையில் நிற்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஏற்கனவே உள்ள பழைய நிழற்குடை இடித்து அகற்றப்பட்ட அதே இடத்தில், புதிய நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.