இந்த செயல்முறையை தடையின்றி செயல்படுத்துவதற்கு, இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) சான்றளித்த மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பரிந்துரைத்த கைரேகை ஸ்கேனர்களை மட்டுமே கல்லூரி நிர்வாகம் வாங்கி வைக்க வேண்டும் எனவும், இன்னும் ஒரு வாரத்துக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியவை பரிந்துரைத்த ஸ்கேனர்களை கொண்டு மட்டுமே ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர வேறு எதுவும் கருவிகள் வாங்கப்பட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.