அதன் பின்னர் பேசிய அவர்; இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பரவியது என்றும், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இதனை ஒழுங்குபடுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், திமுக அரசு இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க சட்டம் இயற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இணையவழி சூதாட்டம் விளையாட்டு தொடர்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.