சென்னை: விநாயகர் சிலை கரைப்பின் போது கடைபிடிப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்டதாக விநாயகர் சிலை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் போன்றவை சிலைகளில் இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.