சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது : துரைமுருகன் விளக்கம்

சென்னை : சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது என்று துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவை அடுத்து அவைக்காவலர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதையடுத்து பேசிய துரைமுருகன், “சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது, அந்த நேரத்தில் வேறு எந்த விவாதத்தையும் எடுக்க முடியாது என்பது விதி. முக்கிய பிரச்சனைகள் குறித்த விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், அவருக்கு சட்டம் தெரியும் ,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி