இதுகுறித்து தமிழ் சமூக நல அமைப்பான ஈமான் கலாசார மையத்தின் பொது செயலாளர் ஹமீது யாசினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 3 பேரும் ஈமான் அலுவலகம் அழைத்து வரப்பட்டு ஒரு மாதமாக அவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்பட்டன. மேலும், புதிய பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் அரசு அதிகாரிகளின் உதவியோடு ஊர் செல்வதற்கான உரிய அனைத்து ஆவணங்களும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.இதன் தலைவர் ஹபீபுல்லாகான் வழிகாட்டுதலில் பொதுச் செயலாளருடன் ராசிக், இம்தாதுல்லா, அஸ்கர் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இதற்கான சென்னை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் ஈமான் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. நேற்று இரவு பத்திரமாக அவர்கள் தாயகம் திரும்பினர்.