கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இது தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து டிஎஸ்பி சாபுவை சஸ்பெண்ட் செய்ய டிஜிபிக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சாபு வரும் 31ம் தேதி ஓய்வு பெற இருந்தார். ஆலப்புழா குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று பிரிவு உபசார விழா நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர் சஸ்ணெ்ட் செய்யப்பட்டதையடுத்து பிரிவு உபசார விழா ரத்து செய்யப்பட்டது. இதற்காக குற்றப்பிரிவு அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பந்தல் அகற்றப்பட்டது.