Sunday, September 29, 2024
Home » பணகுடி அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி: பிறந்தநாளில் இறந்ததால் சோகத்தில் மூழ்கிய கிராமம்

பணகுடி அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி: பிறந்தநாளில் இறந்ததால் சோகத்தில் மூழ்கிய கிராமம்

by Arun Kumar

பணகுடி: பணகுடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியானார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர் இறந்தது நதிப்பாறை கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த நதிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவரது மகன் லிஜின் சாமின் (19). இவர் பணகுடி உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 29ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு விஜின்சாலமின் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் இறந்த கல்லூரி மாணவன் லிஜின் சாமினுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். பிறந்த நாளில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பணகுடி மற்றும் நதிப்பாறை கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறியழுதது, அங்கிருந்த அனைவரையும் பரிதாபப்பட வைத்தது.

You may also like

Leave a Comment

six + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi