போதை கடத்தல் வழக்கில் காதலனுக்கு சிறை; 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: ‘‘திருமண ஆசைவலையில் வீழ்ந்தார்’’

அண்ணாநகர்: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒரு புகார் கொடுத்தனர். அந்த புகாரில், ‘’16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கவேண்டும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செண்பகதேவி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.அப்போது சிறுமி கூறியதாவது;

அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் எல்சன்(22) என்பவர் கடந்த 3 வருடமாக தன்னை காதலித்தார். திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்ததால் நெருக்கமாக பழகிவந்த நிலையில், கர்ப்பம் ஆனேன். இதன்பின்னர் தன்னிடம் பேசுவதை தவிர்த்துவந்தார். அவருக்கு பலமுறை போன்செய்தபோது எடுக்கவில்லை. வீட்டுக்கு சென்று பார்த்தாலும் இருப்பதில்லை. இதன்பிறகு காதலனின் பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி காதலன் தாயாரிடம் விசாரித்தபோது, ஜெயசீலன் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். காதலன் சிறையில் உள்ளார் என்பது எனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் இந்த விஷயத்தை மறைப்பதற்காக செல்போன் காணவில்லை என்று தெரிவித்தேன். ஆனால் எந்த சிறையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, ‘’கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வழக்கில் ஜெயசீலனை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் என்று தெரிந்தது. இதுதொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

பிஎஸ்பி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!