அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் எல்சன்(22) என்பவர் கடந்த 3 வருடமாக தன்னை காதலித்தார். திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்ததால் நெருக்கமாக பழகிவந்த நிலையில், கர்ப்பம் ஆனேன். இதன்பின்னர் தன்னிடம் பேசுவதை தவிர்த்துவந்தார். அவருக்கு பலமுறை போன்செய்தபோது எடுக்கவில்லை. வீட்டுக்கு சென்று பார்த்தாலும் இருப்பதில்லை. இதன்பிறகு காதலனின் பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி காதலன் தாயாரிடம் விசாரித்தபோது, ஜெயசீலன் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். காதலன் சிறையில் உள்ளார் என்பது எனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் இந்த விஷயத்தை மறைப்பதற்காக செல்போன் காணவில்லை என்று தெரிவித்தேன். ஆனால் எந்த சிறையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, ‘’கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வழக்கில் ஜெயசீலனை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் என்று தெரிந்தது. இதுதொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.