சென்னையில் ரூ.250 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

சென்னை: சென்னையில் 56 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த உதயகுமார், சென்னை பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி போதைப்பொருளை விநியோகம் செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு கடத்த இருந்த 65 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 3,338 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?

பாம்பு கடித்து பலி: குடும்பத்துக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை