போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நேற்று முன்தினம் சோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த 2 பேரை பிடித்து, தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய் (24), விஜய் (23) என்பதும், இவர்களுக்கு திருவண்ணாமலை அடுத்த செய்யாறு பகுதியை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (31) என்பவர், பீகாரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சய், விஜய், முரளிகிருஷ்ணா ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், நேற்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்