மதுரை: மதுரையில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. கைதான பிரகாஷ் மனைவி மோனிஷா ஷீலா, ஜேசுதாஸ் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் பொதிகை ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் கடத்திஉய வழக்கில் பிரகாஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.