செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, அரசு பேருந்து மோதி போதை ஆசாமி ஒருவர் காயம் அடைந்தார். செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கத்தில் மது போதையில் இருந்த நபர் சாலையை கடக்க முயன்றார். அப்போது நேற்று முன்தினம் திருக்கழுகுன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.