ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி உள்பட 3 பேர் பரிதாப பலி

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். தெருக்கூத்து கலைஞர். இவரது மகள் சிவநந்தினி(எ)ரேவதி(20), மகன் சிவ(13). சிவநந்தினி தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோவும், சிவ அரசு பள்ளியில் 8வதும் படித்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பெயின்டர் முனுசாமி மகள் திவ்யதர்ஷினி (14), அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். விடுமுறை தினம் என்பதால் நேற்று காலை மூவரும் அப்பகுதியில் உள்ள கொத்திக்குட்டை ஏரியில் துணி துவைக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி பலியாகினர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்