அப்போது, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஏக்நாத் (25) பைக்கில் போதையில் வந்ததாக கூறப்படுகிறது. போக்குவரத்து போலீசார் அவரை மடக்கினார்கள். அப்போது கடும் ஆத்திரம் அடைந்த ஏக்நாத், போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் சக்திவேல், காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஏக்நாத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக வைரலாக பரவியது.
இதையடுத்து போக்குவரத்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதில், போதையில் வந்த ஏக்நாத்தை போலீசார் சரமாரியாக தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சக்திவேல், போக்கு வரத்து காவலர்கள் தினேஷ் மற்றும் அருள் ஆகிய மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே, கோயம்பேட்டில் நடுரோட்டில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டியை தாக்கும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.