685 ஓட்டுநர், நடத்துநர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை, ஆக.18: 685 ஓட்டுநருடன் நடத்துநர்கள் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநருடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று முதல் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதவிக்கு இன்று மதியம் 1 மணி முதல் செப்.18ம் தேதி மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நியமனம் தொடர்பான அனைத்து விவரங்களும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு