கூட்டத்தில் இணை ஆணையர் தேவராணி பேசுகையில், ‘போக்குவரத்து பணியில் ஈடுபடும்போது காவலர்கள் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும், பணியின்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது, வாகன ஓட்டிகள் விதியை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டும், காரில் வருபவர்கள் சீட் பெல்ட்டும் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கூற வேண்டும், வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், கண்ணியத்துடனும் போக்குவரத்து காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று அறிவுரை வழங்கினார். மேலும் போக்குவரத்து காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.