ஆனால், பள்ளிக்கு செல்லாமல் எச்.வி.எப். சாலையில் மருத்துவமனை அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். இதுபற்றி அவர்கள், ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.
அதில், ஆவடி கோவில் பதாகை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஐயப்பன் (25), சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. நேற்றுமுன்தினம் அவரை, போக்சோ வழக்கில் கைது செய்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.