கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். கலைஞர் அவர்கள் எல்லோரும் கல்வி கற்க பள்ளி – கல்லூரிகளை திறந்தார்கள். கட்டணமில்லா பஸ் பயணம் – உதவித்தொகை – முதல் தலைமுறை பட்டதாரிக்கு கட்டண விலக்கு என்ற கலைஞர் அவர்களின் வழியில், கல்வி வளர்ச்சிக்காக காலை சிற்றுண்டி திட்டம் – புதுமைப்பெண் திட்டம் – நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், பட்டப்படிப்புக்காக சேரவுள்ள மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் நம் திராவிட மாடல் அரசு தமிழ் நாடெங்கும் மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் சிறப்பு ‘கல்விக்கடன் முகாம்களை’ நாளை நடத்துகிறது. இந்த முகாம்களில் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயனடைய மாணவ – மாணவியர்களை வாழ்த்துகிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்