சென்னை: திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலன் காக்கும் முத்தான திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மிளிர்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவு செய்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளதே அரசின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி. திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டங்கள், புதுமைப்பெண், முதலீட்டாளர்கள் முதல் முகவரி, மீனவர்கள், விவசாயிகள் நலன் மக்கள் நலன் காக்கும் முத்தான திட்டங்களால் தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது.