திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சத்தியசாய் தலைமை தாங்கினார்.

ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம், தனசேகரன், தமிழரசன், சித்ரா திருஞான செல்வம், மணியன், கிளை செயலாளர்கள் கிருஷ்ணன், ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் கோபி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், தலைமைக்கழக பேச்சாளர் பவானி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் சாதனைகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்துவரும் பல்வேறு திட்டங்களையும் எடுத்துக் கூறினர்.

மேலும் மார்ச் 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பேசினர். இதனைத் தொடர்ந்து 500 மகளிருக்கு புடவை, கட்சி நிர்வாகிகள் 50 பேருக்கு தலைக்கவசம், பொது மக்களுக்கு பிரியாணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். இதில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு