ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம், தனசேகரன், தமிழரசன், சித்ரா திருஞான செல்வம், மணியன், கிளை செயலாளர்கள் கிருஷ்ணன், ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் கோபி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், தலைமைக்கழக பேச்சாளர் பவானி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் சாதனைகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்துவரும் பல்வேறு திட்டங்களையும் எடுத்துக் கூறினர்.
மேலும் மார்ச் 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பேசினர். இதனைத் தொடர்ந்து 500 மகளிருக்கு புடவை, கட்சி நிர்வாகிகள் 50 பேருக்கு தலைக்கவசம், பொது மக்களுக்கு பிரியாணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். இதில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.