சென்னை: திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது என அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆக உள்ளது. கற்பிக்கும் முறையை நவீனமாக்கியுள்ளது திராவிட மாடல் ஆட்சி. நான் முதல்வன் இணையதளத்தில் கடந்த 10 ஆண்டுகளின் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் நமது மாணவர்கள் இன்று முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்கின்றனர் என தெரிவித்தார்.