டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்: டிடிவி தினகரன்

சென்னை: சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரை இன்று பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் டிடிவி தினகரன், இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்பி மகத்தான ஆளுமையாகத் திகழ்ந்த அம்பேத்கரின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும், இந்திய அரசியல் சாசனத்திற்கு எழுத்து வடிவம் தந்தவருமான பாரத ரத்னா டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.

கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, சட்டமேதையாக, சமூகநீதிப் போராளியாக, புரட்சியின் சின்னமாக இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்பி மகத்தான ஆளுமையாகத் திகழ்ந்த அம்பேத்கரின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்” டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை