இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், ஆபத்தான முறையில் கால்வாயை சுத்தம் செய்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக நேற்று நேரில் ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி, சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு முகக்கவசம், கையுறை மற்றும் ஜாக்கெட் போன்ற உபகரணங்களை வழங்கினர்.