மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..!!

சென்னை: பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு துறை தலைவராக மருத்துவர் சுப்பையா சண்முகம் இருந்தவர். மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

 

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!