இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களும், மற்றும் 30 கல்வியாளர்களும் பங்கேற்கின்றனர். மேலும், இந்த பயிலரங்கில் லேப் ஒன்று அமைக்கப்பட்டு அதில் மிருகங்களின் கண்களை வைத்து மாணவர்களுக்கு லைவ் வகுப்புகளும் எடுக்கப்பட்டது. முதுகலை மாணவர்களுக்கான பயிலரங்கில், மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம். சிறப்பான மருத்துவ ஆராய்ச்சிக்கு அகர்வால் விருது வழங்கபட உள்ளன. இந்நிகழ்ச்சியை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநர் அதியா அகர்வால், கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் சவுந்தரி கலந்துகொண்டனர்.
பயிலரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ‘‘மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான கல்வியாளர்களின் விளக்க உரைகள் மற்றும் செய்முறை விளக்கங்களிலிருந்து மதிப்புமிக்க தகவல்களையும், அறிவையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் பங்கேற்கும் கண் மருத்துவர்களின் திறன்களை இந்த முன்னெடுப்பு மேம்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன். நோயாளிகளுக்கும் மற்றும் சமூகத்திற்கும் இன்னும் சிறப்பான சிகிச்சையையும் மற்றும் சேவையையும் வழங்குவதற்கு மாணவர்களுக்கு பயிலரங்கம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.