கொழும்பு: இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை திரும்ப வழங்குவது சாத்தியமற்றது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும், இலங்கையில் இழுவைமடி படகு பயன்படுத்தவதற்கு தடை உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.