சென்னை: சென்னை அருகே பீர்க்கன்கரணையில் சுடுகாட்டில் அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய அண்ணாமலை, ஜில்லா ஆகியோர் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெட்டிக் கொல்லப்பட்ட 2 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இருவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய மர்மக் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.