இரட்டை இலை ஓபிஎஸ்சுக்கு வரும்: அடித்து சொல்லும் ஆதரவு எம்எல்ஏ

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஓபிஎஸ் அணி சார்பில் தேனி பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஓபிஎஸ் அணி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளோம்.

மனு மீதான நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கும் அவர் தேனி தொகுதியில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் அனைத்து வழக்குகளிலும் ஓபிஎஸ் வெற்றி பெறுவார். இரட்டை இலை சின்னம் முடங்காது. அது நிச்சயம் ஓபிஎஸ் கைக்கு தான் வரும். இரட்டை இலை சின்னம் மூலம் 39 தொகுதியிலும் போட்டியிடுவோம்’’ என்றார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது