சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்