தற்போது, அனைத்து பகுதிகளிலும் காட்டு மாடுகள் விவசாய நிலங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக மலம் வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை சில சமயங்களில் பொதுமக்களை விரட்டி தாக்குகின்றன. இதில், பொதுமக்களுக்கு காயம் ஏற்படுவது மட்டுமின்றி சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தொட்டபெட்டா பகுதியில் கூட்டம் கூட்டமாக வளம் வரும் காட்டு மாடுகளால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை ஊட்டி – கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவைகளை இப்பகுதிகளில் இருந்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.