Sunday, September 8, 2024
Home » புகை வேண்டாம்

புகை வேண்டாம்

by Ranjith

உழைப்புக்கும், உழவர்க்கும் நன்றி தெரிவித்து நாம் கொண்டாடும் இனியதொரு தமிழர் திருநாள் பொங்கல். இனிக்கும் கரும்பு, மணக்கும் பொங்கலுடன் மனங்கள் அனைத்தும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி நிற்கிறது. பொங்கலுக்கு முன்ேனாட்டமாய் முதல்நாளான இன்று வருகிறது போகிப்பண்டிகை. பழையன கழிதலும், புதியன புகுதலும் போகியின் பிரதான அம்சங்கள். பழைய பொருட்களை போக்கும் நாள் என்பதால் போக்கி என்று அழைக்கப்பட்டு, அதுவே தற்போது ‘போகி’ என்று மருவி நிற்கிறது. இந்த நாளில் வீட்டில் குவிந்து கிடக்கும் பயனற்ற பழைய பொருட்களை வெளியேற்றி, புதிய பொருட்கள் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் மக்கள்.

இப்படி பழைய பொருட்களை குவித்து வைப்பவர்கள், அதனை தீயிட்டு கொளுத்துவது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து வருகிறது. பயனற்ற பொருட்களையும், கழிவு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் ஒரு சேர எரிக்கும் போது, அந்த இடமே புகை மண்டலமாகிறது. அதிலும், குறிப்பாக நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் போது நச்சுப்புகை மூட்டம் உருவாகிறது. அது அந்த இடத்திலேயே அருகில் இருப்பவர்களுக்கு சுவாச பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரே நாளில் டன் கணக்கில் இதுபோன்ற பொருட்களை எரிப்பதால், அடர்ந்த புகை உருவாகிறது.

இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமன்றி, விமானத்தில் பயணிப்போருக்கும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. போகியில் எரிக்கப்படும் பெரும்பாலான பொருட்களில், கார்பன்-மோனாக்சைடு, கார்பன்-டை ஆக்சைடு மற்றும் சாம்பல் துகள்கள் உருவாகின்றன. குறிப்பாக டயர், பிளாஸ்டிக், நைலான் ஆடைகள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் நச்சுவாயுக்கள், நுரையீரல் பாதிப்புகளை பெருமளவில் ஏற்படுத்துகிறது. நுரையீரல் என்பது சிலியா எனப்படும் சிறிய மூடி போன்ற அமைப்புகளால் வரிசையாக உள்ளது. இது தூசி மற்றும் வைரஸ் துகள்களை பிடிப்பதோடு அகற்றுகிறது.

இந்த சிலியாவானது மாசு நிறைந்த புகையை உள்ளே இழுக்கும் போது, நுரையீரல் பாதிப்புகளை உருவாக்குகிறது என்பது மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை. இது ஒருபுறமிருக்க, நாம் பொருட்களை எரித்து வெளியேற்றும் புகையானது முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், ஏற்கனவே சுவாச நோய்களுக்கு உட்பட்டவர்கள் என்று பலருக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நமது முன்னோர்கள் பின்பற்றிய அனைத்து வழக்கங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

ஆனால், அன்றைய காலகட்டத்தில் மக்கள் பெருக்கம் என்பதும், பிளாஸ்டிக் போன்ற நச்சு பொருட்களின் பயன்பாடு என்பதும் அரிதாகவே இருந்தது.  அப்படிப்பட்ட சூழலில் அவர்கள் போகி கொண்டாடிய விதம் எவருக்கும், எந்த தீங்ைகயும் இழைக்கவில்லை. ஆனால், இயந்திரமயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் இந்த வழக்கம் என்பது அபாயத்திற்கு வித்திடுவதாகவே அமைந்துள்ளது.

எனவே, இதற்கு ஆதாரமான கழிவுகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். முடிந்தவரை ஒதுக்குப்புறமான இடங்களில் உரிய பாதுகாப்புடன் தீயிடுவது மிகவும் அவசியம். ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி’’ என்ற நிலையை கடப்ேபாம். ‘அகிலம் காப்பதும், அபாயம் தவிர்ப்பதுமே போகி’ என்ற புதிய சிந்தனையை மனங்களில் விதைத்து, போகியை கொண்டாடி மகிழ்வோம். இனிய பொங்கல் கொண்டாட்டத்திற்கு இதுவே முதல் அடித்தளம் என்றால் அது மிகையல்ல.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi