முதல் 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.213 கோடியும், அதற்கு அடுத்த ஆண்டில் ரூ.50.5 கோடி,2020ல் ரூ.67 கோடியும் கிடைத்துள்ளன. அதன் பிறகு 3 ஆண்டுகளில் ரூ.613 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதிகபட்சமாக 2021-22 ல் ரூ.291 கோடி,2022-23 ல் ரூ.170.50 கோடி, 2023-24 ல் ரூ.152 கோடியும் கிடைத்துள்ளது. இதற்கிடையே, சுரங்க தொழில் மற்றும் எஃகு ஆலை நிறுவனங்களிடம் இருந்து பிஜேடி கட்சிக்கு அதிக நிதி கிடைத்தது தொடர்பான காரணங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரி உள்ளது.
ஒடிசா காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பொபிதா சர்மா,‘‘ 6 ஆண்டுகளில் இந்தியாவின் மிக பணக்கார கட்சியாக பிஜேடி உருவெடுத்துள்ளது. ஒடிசாவில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள்தான் பிஜேடிக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளன. சுரங்க தொழில் அதிபர்கள் எதற்காக பிஜேடிக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளனர். அதற்கு பிரதிபலனாக அவர்களுக்கு என்ன கிடைக்கும்?. தேர்தல் பத்திரங்களின் மூலம் ஆதாயம் அடைந்துள்ள பாஜ கட்சி மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளது’’ என்றார். ஆதித்யா பிர்லா நிறுவனம் பிஜேடிக்கு ரூ.174 கோடி நன்கொடை அளித்துள்ளது.