Sunday, September 29, 2024
Home » தமிழை பற்றி எங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டாம்: திருக்குறள் சொல்வது அவருக்கே புரியாது மோடியை வறுத்தெடுத்த கனிமொழி

தமிழை பற்றி எங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டாம்: திருக்குறள் சொல்வது அவருக்கே புரியாது மோடியை வறுத்தெடுத்த கனிமொழி

by Dhanush Kumar

தூத்துக்குடி, புதியம்புத்தூரில் தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியதாவது: பிரதமர் திருக்குறள் சொல்வார். அது திருக்குறளா இல்லையா என்பது புரிந்து கொள்வது கடினம். வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் திருக்குறளை சொல்வார். பெருமையாக சொல்வார். தமிழ் மிகப்பழமையான மொழி என சொல்வார். பிரதமரே சொல்கிறார் என பாஜவினர் கூறுகின்றனர். எங்களுக்கே தெரியும். தமிழை விட பழமையான மொழி வேறு எதுவும் இல்லை. அதைச் சொல்வதற்கு நீங்கள் வேண்டாம். தமிழுக்காக என்ன செய்தீர்கள். சமஸ்கிருத்திற்கும், இந்திக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுப்பது இல்லை. பழமையான மொழி என கொண்டாடுகிறீர்களே அதற்காக என்ன செய்தீர்கள் என்றால் ஒன்றுமில்லை.

ஒன்றிய அரசின் பணத்தை எடுத்து கொடுப்பதாக சொல்கிறார்கள். மாநில அரசின் பணத்தை திருப்பி தருவதாகக்கூறி வாங்குகிறீர்களே. திருப்பி தருகிறீர்களா? எத்தனையோ முறை கேட்டாலும், அவர்கள் தர மறுக்கிறார்கள். இதற்கு பெயர் என்ன? தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், டெல்லி என எத்தனையோ மாநிலங்கள் பாஜவை தூக்கி எறிந்து விட்டது. இந்த நாடும் விரைவில் தூக்கி எறியும். அந்த நாள் இந்தியா வெற்றி பெறும் நாள். பாஜகவின் வெற்றி என்பது இந்த நாட்டின் தோல்வி என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

20 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi