சென்னை: பெரம்பூரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் காவல் நிலையம் மற்றும் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பெரம்பூர் பாரதி சாலை மார்க்கெட் பகுதியில் நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செம்பியம் காவல் நிலையத்திலும், திருவிக நகர் 6வது மண்டலத்திலும், நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.