கட்டையை எடுத்து துரத்திய நிலையில் சிறுவனை விட்டுவிட்டு தப்பி ஓடியது. தலை, முகம், கைகளில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். விருதுநகரை சுற்றியுள்ள சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இதனால் மாதம் தோறும் 50க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.