இதில் கை, கால் ஆகிய பகுதிகளில் நாய் கடித்து குதறியதில் சஞ்சனாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த நாயை துரத்தி விட்டனர். பின்னர் சிறுமி சஞ்சனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சஞ்சனாவின் தாயார் ரோஜா(35) கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் கோயம்பேடு போலீசார் 289, 337 ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொன்னையனை கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுக்கப்பட்டார். போலீசார் பொன்னையனை கைது செய்து, உடனே ஜாமினில் விடுவித்தது வேதனையாக இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.