சென்னை: மருத்துவர் மருது பாண்டியன் மரணத்துக்கு பணிச்சுமை காரணமல்ல என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. மருத்துவர் மருதுபாண்டியன் இறப்புக்கான காரணம் குறித்து முறையான உறுப்பு பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். மருதுபாண்டியன் பணிச்சுமை மற்றும் தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் இருந்தார் என்பது முற்றிலும் தவறானது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.