வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தேமுதிக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; அவரின் அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை அறிக்கையில் கூறியதாவது,
‘விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.