எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிட வேண்டிய நெறிமுறைகளை வகுத்திடும் \\”தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம்’ வருகிற 12ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஓட்டல் அகார்டில் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் – மாநிலங்களவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. தலைமையில், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. வரவேற்புரையாற்றிட, கழக இளைஞர் அணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட இருக்கின்றார். அழைப்பிதழ் வரப் பெற்றவர்கள் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.