டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு!

டெல்லி: பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை அறிவித்துள்ளது ஒன்றிய அரசு என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை. ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களையும் பாரபட்சமின்றி பார்க்கவேண்டும். பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது. பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பிற மாநிலங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பூஜை!

ஆசை வார்த்தைகள் பேசி பல பெண்களைக் காதலித்து ஏமாற்றிய Gym பயிற்சியாளர் கைது!