சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு செய்து காட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை, அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காக சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்படும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது. அனைத்து தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் வெற்றியை குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.