அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி எம்பி பேச்சு

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், வடக்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஆர்.எஸ்.பாரதி எம்பி பேசுகையில், ‘‘3 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.விற்கு பின்னடைவு ஏற்பட்டால் டிசம்பரிலேயே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. திமுக தலைவர் தேர்தல் களத்திற்கு தயாராய் உள்ளார்.

நாங்களும் தயாராக உள்ளோம். அண்ணாமலை நடைபயணம் செல்லும் இடங்களில் எல்லாம் நமது முகவர்கள் பின்தொடர்ந்து சென்று பொது மக்களிடம் நமது சாதனை குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும்,’’ என்றார். கூட்டத்தில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.விவேகானந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்எஸ்கே இப்ராகிம், கீதா ஆனந்தன் சதீஷ், பாஸ்கரன், ஆர்டி பூபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வேந்திரன், சாலமோன், முரளிகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் சீனிவாசன், ஜெகதீஸ்வரன், நடராஜன், ஜேசுதாஸ், சரவணா, ரவி, கருணாநிதி, கலாநிதி குணாளன், எம்.வி.குமார், அபுதாகிர், கார்த்திக் கீர்த்தி, பிரசாந்த், பிரகாஷ், பிரபாகரன், பால அமுதநாதன், சண்முகம், காஜாமொய்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்