சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடங்கியது. திண்டுக்கல், கரூர் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்துகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை காஞ்சிபுரம், புதுச்சேரி நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்துகிறது. ஜன.24 முதல் நடைபெற்று வரும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.