சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடங்கியது. திண்டுக்கல், கரூர் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்துகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை காஞ்சிபுரம், புதுச்சேரி நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்துகிறது. ஜன.24 முதல் நடைபெற்று வரும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்