Friday, June 28, 2024
Home » இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகம் : பேரவையில் அமைச்சர் உதயநிதி புதிய அறிவிப்புகள்!!

இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகம் : பேரவையில் அமைச்சர் உதயநிதி புதிய அறிவிப்புகள்!!

by Porselvi

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு..

*சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ. 25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் விடுதியாக மேம்படுத்தப்படும்.

*சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். 100 வீரர் வீராங்கனைகளுக்கு 3% விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும்.

*ரூ.100 கோடியில் டாக்டர். கலைஞர் விளையாட்டு 2191 உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

*இந்தியாவிலே முதல்முறையாக, ரூ.12 கோடியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.மேலக்கோட்டையூர் அருகே SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை அமைக்கப்படும்.ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ் வீரர்கள் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் நடவடிக்கை.

*ரூ.50 கோடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும் விளையாட்டு அரங்கங்களும் சீரமைக்கப்படும்

*முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூ.66 கோடி ஒதுக்கீடு : 22 சட்டமன்றத் தொகுதிகளில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.

*மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில்
Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம்.தென் தமிழ்நாட்டைச் சார்ந்த நீச்சல் வீரர்/வீராங்கனைகள், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் நடவடிக்கை.கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம்.

*ரூ.10 கோடியில் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

*தரம் உயரும் ஹாக்கி ஆடுகளம் : அரியலூர், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தற்போதுள்ள ஹாக்கி ஆடுகளம் செயற்கை இழை ஆடுகளமாகத் தரம் உயர்த்தப்படும்.தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை.

*கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர் பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். களரி, அடிமுறை, சிலம்பம், சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் போன்ற தென் தமிழ்நாட்டின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் சீரிய முயற்சி.

*தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல் திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட Athlete Management System (AMS) எனும் மென்பொருள் செயல்படுத்தப்படும்.

*மேலக்கோட்டையூர், நுங்கம்பாக்கம், வேளச்சேரி வளாகத்தில் முதன்மைநிலை விளையாட்டு மையங்கள் (Centre of Excellence) அமைக்கப்படும். மேலக்கோட்டையூர் Fencing, Badminton, Cycling, Archery, Table Tennis
நுங்கம்பாக்கம்: Tennis வேளச்சேரி : Swimming & Gymnastics

*SDAT-யின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 2,330 இலிருந்து 2,600-ஆக உயர்த்தப்படும். நாள் ஒன்றுக்கான உணவுப்படி ரூ.250-இலிருந்து ரூ.350-ஆக உயர்த்தப்படும்.சீருடை மானியத் தொகை ரூ.4,000-இலிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்படும்.உபகரண மானியத் தொகை ரூ.1,000-இலிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.

*ரூ. 5 கோடியில் நவீன விளையாட்டு உபகரணங்கள் : விளையாட்டுப் போட்டிகள். பயிற்சிகள், முகாம்கள் நடத்த விளையாட்டு விடுதிகளுக்குத் நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

*நவீன உடற்பயிற்சிக் கூடம் : மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை ஹாக்கி ஆடுகளத்துடன் கூடிய புதிய நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைப்பு.

*சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதியும் அமைக்கப்படும்.

*இளைஞர்களை நல்வழிப்படுத்த புதிய இளைஞர் கொள்கை அறிமுகம். புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காண உதவும் உயரிய புதிய விளையாட்டுத் திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கம்.

*ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூ.20 இலட்சத்திலிருந்து ரூ.25 இலட்சமாக உயர்வு.. ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்கு ரூ.15 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்வு

*தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.14 இலட்சத்திலிருந்து ரூ 28 இலட்சமாக உயர்வு; நவீன ரக துப்பாக்கிகள் வாங்க நிதி உதவி உயர்த்தி வழங்க நடவடிக்கை

*நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்களுக்கு நிதி ஒதுக்கீடு : 2024 ஆம் ஆண்டு முதல் ரூ. 50 இலட்சம் தொடர் செலவினமாக வழங்கப்படும்.

*வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் / வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 இலட்சம் நிதி ரூ. 4 இலட்சமாக உயர்வு.

மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய வசதி: மாநிலத்தின் உள் வெளி விளையாட்டரங்கங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும்.

*தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் புதிய பயிற்சியாளர்களாக நியமனம். கோவை கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான பணிகள் இந்தாண்டு தொடங்குகிறது.

You may also like

Leave a Comment

sixteen + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi