Friday, October 4, 2024
Home » கலைஞரின் நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதி பேரணி: எம்பி, எம்எல்ஏக்கள், மாலை அணிவித்து மரியாதை

கலைஞரின் நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதி பேரணி: எம்பி, எம்எல்ஏக்கள், மாலை அணிவித்து மரியாதை

by Ranjith

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக சார்பில், கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி நடந்தது. அதில், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், எம்பி செல்வம், மேயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைதி பேரணி நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த அமைதி பேரணி காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே புறப்பட்டு காந்தி சாலை, ரங்கசாமி குளம், டிகே நம்பி தெரு வழியாக காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலகத்தில் முடிவடைந்தது. பின்னர், அங்குள்ள கலைஞர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட அவைதலைவர் இனியரசு, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகர அவை தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர் முத்து செல்வன், ஜெகநாதன், பகுதி செயலாளர் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஒன்றிய செயலாளர் குமார், சேகர், சாலவாக்கம் குமார் ஞானசேகரன், குமணன், படுநெல்லி பாபு அணிகளின் அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய நகர திமுக சார்பில், கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு, ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் தலைமையில், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல், கேளம்பாக்கத்தில், திருப்போரூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், கலைஞரின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன் ஆகியோர் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.

இதில், ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறுசேரி ஊராட்சி துணை தலைவர் ஏகாம்பரம் தலைமையில், நாவலூர் ஊராட்சி தலைவர் மகாலட்சுமி ராஜாராம் ஆகியோர் தலைமையில், கலைஞர் படத்திற்கு அஞ்சலி செலுத்திப்பட்டது. இதேபோல் முட்டுக்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன் அஞ்சலி செலுத்தினார். அதோபோல, தாழம்பூர், காரணை கிராமங்களில் பல்வேறு இடங்களில் கலைஞர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமையில் பையனூர், செம்பாக்கம், தண்டலம், மானாம்பதி, திருநிலை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர திமுக சார்பில், கலைஞரின் 5வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நேற்று‌ செங்கல்பட்டில் நடந்தது. இந்த ஊர்வலம் மணி கூண்டு அண்ணா சிலையிலிருந்து தொடங்கி, ராட்டினம் கிணறு சென்றடைந்து. பின்னர், அங்கு அலங்கரிக்கப்பட்ட கலைஞர்‌ கருணாநிதி உருவப்படத்திற்கு, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகர மன்ற துணை தலைவர் அன்புச்செல்வன், நகர நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

You may also like

Leave a Comment

15 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi