திமுக பிரமுகர் தற்கொலை

புழல்: மாணவரணி துணை அமைப்பாளருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புழல் புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமணன் (27). இவர் மாதவரம் வடக்கு பகுதி திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவதிப்பட்டு வந்த குமணன் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு